யாருக்கு கடன் கொடுத்தால் திரும்பி வராது?

கடன் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகவும் அத்தியாவசியமாகிவிட்ட ஒரு செயல். எப்பேர்பட்ட கோடீஸ்வரனாகி இருந்தாலும் அல்லது பெரிய பெரிய தொழில் நிறுவனங்களை நடத்தும் multi millionaire ஆக இருந்தாலும் கடன் வாங்காமல் இருக்க முடியாது.

தனி நபர்கள் தங்களுக்கு அறிமுகம் ஆனவர்கள் அல்லது இன்னொருவர் சொல்லி கடன் கொடுத்தவர்கள், கடனை கொடுத்துவிட்டு திரும்ப பெற முடியாமல் தவிப்பார்கள் நிறைய பேர். சிலருக்கு சூழ்நிலை காரணமாக வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத இருக்கலாம். ஆனால் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று பல வித பொய்களை சொல்லி கடனை வாங்கி கொண்டு வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் நிறைய பேர்.

நியாயமான வட்டிக்கு கடன் வாங்கி கொண்டு திருப்பி தர வசதி வாய்ப்புகள் இருந்தும் ஏன் திருப்பி தரவேண்டும் என்று அமைதியாக இருப்பவர்கள் ஒரு சிலர். ஒரு சிலர் அதிக வட்டி வாங்குவார்கள். metre வட்டி என்று சொல்வார்கள். மணிக்கு மணி நிமிடம் வட்டி ஏறி வட்டி ஏறி கொண்டே இருக்கும். கொடுத்த வட்டியை கணக்கு பார்த்தல் அசலை விட நாலு மடங்கு ஐய்ந்து மடங்கு அதிகமாக இருக்கும். அது போன்றவர்களிடம் அவசரத்திற்கு கடனை வாங்கி கொண்டு அவஸ்தை படுபவர்கள் எத்தனையோ பேர்.

எனவே கொடுத்த கடனை திரும்ப செலுத்துவதற்கு நாணயம் என்பது மிக மிக அவசியம். நல்ல பண்பு அவசியம். ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடாது. சொன்ன சொல்லை காப்பாற்ற கூடிய தகுதி வேண்டும்.

வாங்கிய கடனை திருப்பி செலுத்தகூடிய தகுதிகளை ஒருவரை பார்த்த உடனையே தெரிந்து கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது. இரு வேறு குணங்களை அல்லது பல் வேறு குணங்களை கொண்ட மனிதர்களிடையே யார் நாணயமானவர் யார் நல்ல பண்புகளை உடையவர் என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும். வெளி தோற்றத்தில் நல்லவர் போல இருக்கலாம், நாணயமானவர் போல பேசலாம் ஆனால் செயல் என்று வந்து விட்டால் நாணயத்தை காற்றில் பறக்க விட்டு விட்டால் என்ன செய்ய முடியும்?

சரி ஜோதிட ரீதியாக ஒருவர் நல்லவர், நாணயமானவர், சொன்ன சொல்லை காப்பாற்றுவார் என்று தெரிந்து  போன்ற முடியுமா? முடியும்.

நான் ஏற்கனவே பல கட்டுரைகள் இந்த வலை பதிவிலேயே எழுதி உள்ளேன்.
ஜாதக கட்டம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்லது கண்ணாடி. என்ன நடக்கும், எப்படி நடக்கும், என்ன நடக்காது, ஏன் நடக்காது போன்ற பல விசயங்களை கண்ணாடி போல காட்ட கூடியது.

அதுபோன்றுதான் ஒரு மனிதனுடைய உண்மையான குணாதிசயம் என்ன, நல்லவனா கெட்டவனா, நாணயம் உள்ளவனா, வாங்கிய கடனை திருப்பி தருவானா அல்லது வம்பு வழக்கு பண்ணிதான் வாங்க முடியுமா, வார்த்தையில் உண்மை இருக்கிறதா அல்லது பொய்தான் இருக்கிறதா  போன்றவற்றை அவனுடைய ஜாதகத்தில் குடி கொண்டுள்ள கிரகங்களின் அடிப்படையிலும், எங்கு குடி கொண்டு இருக்கின்றன என்ற இடத்தின்  அடிப்படையிலும், யாருடன் குடி கொண்டு இருக்கிறார்கள் என்ற அடிப்படையிலும், யாருடைய பார்வையில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையிலும் தெரிந்து அதன் அடிப்படையில் கடன் கொடுத்தால் கடனை திருப்பி வாங்க முடியவில்லை என்ற நிலையை தவிர்க்கலாம்.

மேற்சொன்ன கிரக சூழ்நிலைகள் ஒருவருடைய ஜாதகத்தில் பாதகமாக இருந்து, சேர்ந்து, பார்வையில் அடிபட்டு இருந்தால் அது போன்ற நபர்களுக்கு கடன் கொடுத்தால் அந்த நபர்கள் தங்கள் வாக்குரிதியையும்  காப்பாற்றமாட்டர்கள், நாணயம் என்றால் என்ன விலை என்று கேட்பார்கள், கடன் வாங்குவதற்கு பல வித பொய்களை கூசாமல் சொல்லி பலரிடமும் கடனை வாங்கி ஏமாற்றும் எண்ணத்துடன் இருப்பார்கள். அது போன்ற நபர்களுக்கு கடன் கொடுத்தால் திரும்பி வராது என்பதில் சந்தேகம் இல்லை.
                                                           
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

எந்த தொழில் செய்தால் வெற்றியடைய முடியும்?

ஒவ்வொருவரும் தொழில் செய்வதின் முக்கிய நோக்கமே தொழில் செய்து அதில் லாபம் ஈட்டுவதே ஆகும்.

ஆனால் சிலர் பார்த்தீர்கள் என்றால் அவர்களுக்கு பொருத்தமே இல்லாத தொழிலை செய்து கொண்டு இருப்பார்கள். பொருத்தமே இல்லாத தொழில் என்றால் இருக்கும் பணத்தை எல்லாம் தொழிலில் போட்டு அதில் எந்த வித லாபமும் இல்லாமல் கிணற்றுக்குள் போட்ட கல் போல போட்ட பணம் எல்லாம் போன இடம் தெரியாமல் இடிந்து பொய் உட்கார்ந்து இருப்பார்கள்.

இன்னும் சிலர் போட்ட முதலும் போய், மேற்கொண்டு கடனையும் வாங்கி அந்த கடனும் தொழிலில் மூழ்கி போய், மேற்கொண்டு வட்டி சுமையும் ஏறி, நிறுவனத்தையே மூடிவிட்டு கடன் காரர்களுக்கு பயந்து போய் ஊரை விட்டே ஓடி போகலாமா என்ற நிலை.     

எல்லோருக்கும் எல்லா தொழிலுமே சரியாக வராது. மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.

நன்றாக ஓடி கொண்டு இருக்கும் ஓட்டல் கடை வைத்திருப்பவர் மேற்கொண்டு லாபம் கிடைத்தால் இருக்கும் கடையைத்தான் விரிவு படுத்தி 
வியாபாரத்தை பெருக்குவாறே தவிர, அதிக லாபம் கிடைத்தவுடன் துணி கடை ஆரம்பிக்க மாட்டார்.

அதே போன்று ஒரு ஜவுளி கடை வைத்து அதில் நல்ல லாபம் கிடைத்தவுடன்
மேற்கொண்டு அந்த ஜவுளி கடையைத்தான் விரிவு படுத்துவாரே தவிர, சம்பந்தமே இல்லாமல் ஒரு ஓட்டல் கடையை புதிதாக திறக்க மாட்டார்.

நீங்கள் நினைக்கலாம் அம்பானி போன்றவர்கள் எல்லாம் பல வியாபாரம் செய்கிறார்களே அது எப்படி என்று?

பல வியாபாரம் செய்தாலும் அம்பானிக்கு அத்தனையும் பரிட்சயம் என்று சொல்லமுடியாது. யாரையாவது நம்பித்தான் ஒவ்வொரு வியாபாரத்தின் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தால் அவர் காட்டுவதுதான் லாபம் அவர் சொல்வதுதான் நஷ்டம். இன்னொருவரிடம் வியாபார பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக தூங்க முடியுமா?
சரி, போ வந்த வரைக்கும் லாபம் என்று ஆறுதல் அடைந்துவிட்டு வேண்டுமானால் தூங்கலாம்.

அதனால் கூடியமட்டும் நமக்கு என்ன தொழில் பரிட்சயம் ஆக இருக்கிறதோ அதை செய்தோம் என்றால் நல்லதொரு லாபம் கிடைக்கும் என்று நம்பலாம்.

பொதுவாக ஒருவருக்கு ஒரு தொழில் பரிட்சயம் என்றால் அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ அந்த தொழிலில் ஈடுபாடு இருக்கும். ஒரு தொழிலில் ஒருவருக்கு நல்ல ஈடுபாடு இருக்கும்போது அந்த தொழிலை மிகவும் ஆர்வத்துடன் செய்வார். ஆர்வத்துடன் ஒரு தொழில் செய்யும்போது புது  புது யுக்திகளை புகுத்தி நல்ல லாபங்களை அடைவார்.

ஒருவர் ஒரு தொழிலை ஆர்வத்துடன் செய்கிறார் என்றால் அது அவருடைய
உடலுடன் ஐக்கியமான விஷயம். ஒரு விசயம் அது தொழிலாகட்டும் அல்லது
விளையாட்டு ஆகட்டும் ஒருவருடைய உடலுடன் ஐக்கியம் ஆகும் போது அதில்வெற்றிகளை குவிக்க முடியும்.

விளையாட்டு வீரரை தொழில் செய்ய சொன்னால் அதில் அவர் சிறப்பாக செய்வார் என்று கூற முடியாது. விளையாட்டில் வேண்டுமானால் அவர் சாதனை புரியலாம். விளையாட்டு சார்ந்த தொழிலில் வேண்டுமானால் அவர்
பணம் ஈட்டலாம். வேறு எந்த தொழிலிலும் அவரால் சாதனை புரிய முடியாது.

அதே போன்று ஓட்டல் தொழில் செய்யும் ஒருவர் விளையாட்டை வேண்டுமானால் ரசிக்கலாம் ஆனால் அவரால் ஒரு புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஆக  முடியும் என்பது சற்று சந்தேகம்தான்.

எனவே ஒவ்வொரு மனிதர்களுடைய ஆசைகள், ஆர்வம், ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்பட்டும்.

அதுபோன்றுதான் ஒருவருக்கு நல்ல லாபத்தை தரும் தொழில் மற்றொருவருக்கு அதே தொழில் லாபத்தை தராது. காரணம் லாபம் ஈட்டும்
தொழிலை செய்பவர் அவருக்கு ஏற்ற தொழிலை தெரிந்தோ தெரியாமலோ தேர்ந்தெடுத்து செய்யலாம்.

ஆனால் நஷ்டத்தை ஈட்டும் தொழிலை செய்யும் ஒருவர் அவருக்கு ஆர்வம்
இல்லாத அல்லது பொருத்தம் இல்லாத தொழிலை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டு இருப்பார்.

ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன காரணம்?

மனிதர்களுடைய ஆசைகளும், ஆர்வங்களும் அவர் அவர் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. அதைதான் ஒவ்வொருவருடைய ஜாதக கட்டங்களும் தீர்மானிக்கின்றன.

ஒருவருக்கு காரம் பிடிக்கும். ஒருவருக்கு இனிப்பு பிடிக்கும். ஒருவருக்கு புளிப்பு பிடிக்கும். ஒருவருக்கு கிரிகெட் விளையாட்டு பிடிக்கும். ஒருவருக்கு football பிடிக்கும். ஒருவருக்கு ஹாக்கி பிடிக்கும். ஒருவர் doctor படிக்கவேண்டும் என்று விரும்புவார். ஒருவர் IAS  ஆக வேண்டும் என்பார். ஒருவர் ஓட்டல் அதிபர் ஆக  வேண்டும் என்பார். ஒருவர் நகை கடை அதிபர் ஆக வேண்டும் என்பார்.

மனிதர்களுக்குள் ஒவ்வொருவரிடமும் ஏன் இத்தனை விருப்பம்? காரணம் ஒவ்வொருவர் பிறக்கும் போதும் அமைந்த வித்தியாசமான கிரக நிலைகள் தான் காரணம். கிரகங்கள்தான் மனித வாழ்க்கையின் அணைத்து அம்சங்களிலும் அதாவது தொழில், வேலை, வியாபாரம் மற்றும் பல விசயங்களில்  வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன.

எனவே ஒருவர் ஒரு தொழில் செய்து வெற்றியடைய வேண்டும் என்றால் முதலில் அவருக்கு பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுத்து  செய்ய வேண்டும். இதற்க்கு அவர் பிறந்த போது அமைந்த கிரகங்களின் நிலையை கொண்டு அந்த கிரகங்களின் இருப்பிடம், கூட்டணி, பார்வை போன்றவற்றை
ஆராய்ந்து அதற்க்கு தகுந்த தொழிலை தேர்ந்தெடுத்து   செய்தால் நிச்சயமாக
நல்ல லாபம் ஈட்டலாம், வெற்றியடைய முடியும்.        

   
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

வேலை கிடைப்பதற்கு தாமதம் ஏன்?

வேலை என்பது இன்றைய ஆண்களிடமும் பெண்களிடமும் மிகவும் அத்தியாவசியமான தேவை ஆக உள்ளது.

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கிறதோ இல்லையோ இந்த உலகத்தில் ஜீவனம் நடத்துவதற்கு ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டிதான் உள்ளது.

சமீபத்திய செய்தி தமிழகத்தில் உள்ள அரசு துறை பணிகளுக்கு ஒரு சில ஆயிரம் காலி இடங்களுக்கு வந்துள்ள விண்ணப்பங்கள் 14 லட்சத்தையும் தாண்டி விட்டதாம். அப்படி என்றால் எத்தனை லட்சம் பேர் வேலை  தேடி கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். 

வேலை தேடுபவர்கள் பலருக்கு உரிய கல்வி தகுதி, பொது அறிவு தேர்வில் வெற்றி பெறும் தகுதிகள் இருந்தும் வேலை கிடைக்காமல் போகும் நிலை எத்தைனையோ பேருக்கு உண்டு.

ஆனால் ஒரு சிலர் பார்த்தீர்கள் என்றால் எல்லாவற்றிலுமே average தான். ஒரு நல்ல திறமைசாலியை போன்று நல்ல வேலை கிடைத்து  நல்ல உயரிய பதவியுளும் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.

நல்ல திறமைசாலிக்கு வேலை கிடைப்பதில் சிரமம். திறமை
இல்லாதவர்கள் நல்ல வேளையில்.

இதற்க்கு என்னவென்று சொல்வது. பொதுவாக என்ன சொல்வார்கள். அவன் புண்ணியம் செய்தவன் என்று.

புண்ணியம்  என்பது  என்ன? பிறருக்கு உதவி செய்ய முடிய வில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது. ஒரு சிலர் தன்னுடைய வீட்டு குப்பையை அடுத்த வீட்டுக்காரன் வாசலில் கொட்டுபவர்களும் இருக்கிறார்கள். அதுதான் உபத்திரவம் செய்வது.

பெரியவர்களாக இருந்தால் தெரிந்தோ தெரியாமலும் மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் இருப்பது. தனக்கிருக்கும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மற்றவர்கள் சொத்தை தன்னுடையதாக்கி கொள்வது போல. அந்த பாவம் யார் தலையில் விடியும். அவர்களுடைய பிள்ளைகள் தலையிலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தலையிலும்.

இதுபோன்று இன்னும் எண்ணற்ற பாவகரமான செயல்களை சிலர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இது போன்ற பாவகரமான செயல்களுக்கு என்ன  விளைவு உண்டாகும்?

சந்தேகமே இல்லை அவர்களுடைய சந்ததிகளை பாதிக்கும். சந்ததிகளுடைய  வளமான வாழ்க்கைக்குரிய செயல்களை பாதிக்கும். அந்த செயல்களை நடக்க விடாமல் செய்யும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. ஒருவருக்கு முற்பகலில் அதாவது காலையில் செய்த கெடுதல் அன்றே அவரை திரும்ப தாக்கும் என்பதாகும்.       


ஜோதிட ரீதியாக அதற்குண்டான பதில் என்ன?

ஒருவர் என்னதான் முயற்சி செய்தாலும் அவருக்கு வேலை வாய்ப்பு தட்டி செல்கிறது என்றால் முன்னோர்கள் செய்த சில பாவங்கள் இவர்களுடைய முயற்சியை தடை செய்கிறது என்று அர்த்தம்.

பாவங்கள் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வது. ஒருவர் பிறந்த நேரத்தில் அமைந்த கிரகங்கள்தான் ஜாதகத்தில் கட்டங்களாக வரைய படுகிறது. ஒவ்வொரு கட்டமும் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமாகும்.

அதுபோன்று  ஒருவருக்கு தடைகளை உண்டாக்க கூடிய பாவங்கள் இருந்தால் அது வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் தடையாக இருக்கும்.
அந்த தோஷங்களை உரிய வழிமுறைகள் மூலம் நீக்கினால் வேலை வாய்ப்பு கிடைப்பதர்க்குண்டான வழிமுறைகளை ஏற்படுத்தலாம், தாமதத்தை தவிர்க்கலாம்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 
  
            

திருமணம் தள்ளி கொண்டே போவதற்கு என்ன காரணம்?

திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயம்.

ஆனால் ஒரு சிலருக்கு பார்த்தால் திருமணம் தள்ளி கொண்டே போகும். நிறைய வரன்கள்  வந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக திருமணம் தள்ளி கொண்டே போகும்.

இது போன்று திருமணம் தள்ளி கொண்டே செல்லும்போது பெண்களின் நிலைமைதான் மிகவும் மோசம்.

ஊரார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.

பெண்ணாக இருந்தால் நல்ல அழகும், படித்திருந்தால் சம்பாதிக்கும் நிலையும் இருக்கும் ஆனால் திருமணம் மட்டும் பல வரன்கள் வந்து தட்டி சென்று கொண்டே இருக்கும்.

ஆணாக இருந்தாலும் நல்ல அழகும், படிப்பும், வேலையும் இருந்தாலும் திருமணத்திற்கான வரன் சாமான்யமாக அமையாது.

இதெற்கெல்லாம் ஜோதிட ரீதியாக என்ன காரணம்?

ஒருவருக்கு திருமணம் தடைபடுவதர்க்கு வாழ வேண்டிய ஒருவரை வலுகட்டாயமாக வாழ விடாமல் செய்வது, சந்தோசமாகக இருப்பவர்களை சங்கடத்தில் உள்ளாக்குவது, மற்றவர்களை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்துவது, உதவி செய்ய முடிய வில்லை என்றாலும் உபத்திரவங்கள்  செய்வது, பெண்களுக்கோ ஆண்களுக்கோ துரோகம் செய்வது,  இது போன்று இன்னும் செய்யக்கூடாத பாப செயல்கள் தான் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமண தடை என்ற ரூபத்தில் வந்து கஷ்டபடுத்தும்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால் திருமண வயதில் இருக்கும் ஒரு ஆணோ, பெண்ணோ அவர்களுக்கு தெரிந்து எந்த பாவமும் செய்யாமல் அவர்களுடைய திருமணம் தள்ளிக்கொண்டே போகும்.

அவர்கள் பாவம் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுடைய தாய் தந்தையர் மேலே கூறியது போன்ற  பாவ செயல்கள் செய்திருந்தாலும் அது பிள்ளைகள்   தலையில்தான் விடியும்.

சரி, தாய் தந்தையரும் நல்லவர்கள்தான் ஆனால் அவர்களுக்கு ஏன் இந்த சோதனை?

காரணம் அவர்கள் முன்னோர் செய்த பாவம் இவர்கள் பிள்ளைகள் தலையில் வந்து விடியும்.

சரி, இதற்க்கு என்னதான் தீர்வு.

சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணின் பிறந்த நேரத்தின் போது அமைந்த கிரகநிலைகள், அவற்றின் கூட்டணி, பார்வை பலன், மறைவு பலன்கள் போன்றவற்றை ஆய்வு செய்தால் எந்த மாதிரியான காரணங்களினால் திருமணம் தடை உண்டாகிறது என்று கண்டுபிடித்து அதற்குரிய வழி  முறைகளை மேற்கொண்டால், கால தாமத திருமணத்தை தவிர்க்கலாம்.

திருமண தடை என்பது நிரந்தரம் அல்ல உரிய வழிமுறைகளை மேற்கொள்ளும்போது தடைகள்  பனி போல் விலகும்.
 
   
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

பிள்ளைகள் எந்த படிப்பு படிக்கவேண்டும்?

எந்த படிப்பு படிக்க வேண்டும்? எந்த படிப்பு படித்தால் ஒருவர் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் படிக்க முடியும். அக்கறையுடனும் ஆர்வத்துடனும் படிக்கும்போது அவரையும் அறியாமல் அந்த படிப்பில் ஈர்ப்பு ஏற்பட்டு நல்லதொரு சாதனை புரிகிறார்.

நல்லதொரு சாதனை புரியும்போது அவருக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுவதில்லை. நல்ல சம்பளமும் கிடைப்பதற்கு வாய்ப்பாகிறது. அவருக்கு ஆர்வம் உள்ள துறையில் வேலையும் கிடைத்து உற்சாகமாக பணியும் ஆற்றுவார். உற்சாகமாக பணியாற்றும் போது பதவி உயர்வு சுலபமாக கிடைத்து பெரிய பதவிகளை அடைவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

படிப்பை தேர்ந்தெடுப்பது என்பது சிறு வயது முதலே ஒருவருடைய ஆர்வத்திற்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும். இந்த விசயத்தில் யாருடைய வற்புறுத்தலும் இருக்க கூடாது. வற்புறுத்தல் இருந்தால் பின்பு அவர் கடமைக்காக படிக்க வேண்டிய சூழ்நிலைதான் உருவாகும்.

ஆர்வத்திற்கு தகுந்தவாறு ஒருவர் தன்னுடைய படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கும்போது சாதனைகள் பல அந்த படிப்பில் அவர் புரிவார். பிற்காலத்தில் அவருக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் இருக்காது.

ஆனால் ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தையும் ஆர்வத்தையும் அறியாமல் காதில் விழுந்த செய்திகளையும், மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு அந்த பிள்ளைக்கு அவருக்கு விருப்பம் இல்லாத ஒரு படிப்பை படிக்க சொல்லி கட்டயபடுத்துகின்றனர்.

ஆர்வம் இல்லாத படிப்பை பெற்றோர்கள் அல்லது தவறான ஆலோசனையின் பேரில் விருப்பம் இல்லாமல் படித்து எதிர்காலமே கேள்வி குறியாகும் சூழ்நிலை உருவாகிறது.

 எனவே ஒருவர் நல்லதொரு வேலை வாய்ப்பு பிற்காலத்தில் கிடைக்க வேண்டும் என்றால்  அவர் சிறு வயது முதல் தேர்ந்தெடுத்து படிக்கும் படிப்பை
பொருத்து அமையும்.

இந்த விசயத்தில் பெற்றோர்கள் பொறுப்புடன் அவர்கள் பிள்ளைக்கு அவர்களுடைய பிள்ளையின் ஆர்வத்திற்கு தகுந்தவாறு படிப்பினை தேர்வு செய்வதற்கு உதவி செய்யவேண்டும். விருப்பம் இல்லாத படிப்பை படிக்க சொல்லி நிர்பந்தம்  செய்யகூடாது.

சில பிள்ளைகள் யாருடைய அறிவுரையும் இல்லாமல் அவர்களாகவே அவர்களுக்கு ஆர்வம் உள்ள படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பார்கள். அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விட வேண்டும்.

 சரி ஜோதிட ரீதியாக ஒருவருக்கு எந்த படிப்பு நல்ல எதிர்காலத்தை எற்படுத்திதரும் என்பதை தெரிந்துகொள்ள முடியுமா ?

நிச்சயமாக முடியும். பிறந்த நேரப்படி அமைந்த கிரகங்களின் அடிப்படையில்
பார்வை, சேர்க்கை போன்றவற்றால் பாதிக்கபடாமல் இருக்கும் அமைப்பினை வைத்து , உரிய பொருத்தமான படிப்பை தேர்ந்தெடுத்து படித்தால் நல்ல வேலை வாய்ப்பும் எதிர் காலமும் அமையும் என கூறலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

சொந்த வீடு யாருக்கு அமையும்?

சொந்த வீடு வாங்க வேண்டும், அல்லது காலி மனை வாங்கி அதில் வீடு கட்டி குடியேற வேண்டும். இது நியாயமான பெரும்பாலோனரின் ஆசை.

காரணம் வாடகை வீட்டில் குடியிருந்து பல வித கஷ்டங்களையும், இன்னல்களையும் அனுபவித்து எப்போது நமக்கு இந்த தொல்லையில் இருந்து விமோசனம் பிறக்கும் என்று ஏங்கி கொண்டு இருப்பவர்கள் பலர்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் தன்னுடைய சுய சம்பாதியத்தில் வீடு வாங்குவது ஒரு ரகம்.

அடுத்து கடன் வாங்கி வீடு கட்டுவது இன்னொரு ரகம்.

மூன்றாவதாக மூதாதையர் மூலம் வாரிசு அடிப்படையில் சொந்த வீடு அமைவது.

ஒருவர் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் வீடு வாங்கினாலும், கடன் வாங்கி வீடு வாங்கினாலும், மூதாதையர் சொத்து மூலம் வீடு கிடைக்கும் அமைப்பு இருந்தாலும் சொந்த வீட்டில் குடியிருக்கும் பாக்கியம் வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ பேர் சொந்த வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலையில் உள்ளனர்.

அதுபோன்று கடன் வாங்கி வீடு கட்டினாலும் அந்த வீட்டை கடன் பிரச்னை தாங்காமல் விற்று விடும் நிலைமையில் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.

பூர்வீக சொத்தின் அடிப்படையில் வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் தவிப்பவர்கள் எத்தனையோ பேர். காரணம் கோர்ட், கேஸ் போன்றவைகள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது சொந்த வீட்டில் குடியிருந்து கடைசிவரை அனுபவிப்பதற்கும்  யோகம் வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் தலை கீழாக  நின்றாலும் சொந்த வீடு அமையாது. அப்படியே அமைந்தாலும் அந்த வீட்டில் குடியிருக்க முடியாத சூழ்நிலை உருவாகும் இல்லையென்றால் அந்த வீட்டை  விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

சரி. ஜோதிட ரீதியாக இதற்கு என்ன தீர்வு?

ஒருவருக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்றாலும், அந்த சொந்த வீட்டிலேயே   காலம் பூராவும் குடியிருக்க வேண்டிய யோகம் வேண்டும் என்றாலும் அவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் அமைந்த கிரகங்களின் அடிப்படையிலும் சுகஸ்தானம் என்று சொல்லப்படும் அமைப்பும், பஞ்சமா ஸ்தானம்,  பாக்கியஸ்தானம் மற்றும் லக்கினாதிபதி அது போன்று இன்னும்   வேறு சில அமைப்புகளும் அமர்வு, பார்வை, சேர்க்கை போன்றவற்றால்  பாதிக்கப்பட கூடாது.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு சொந்தவீடு வாங்கி அதில் குடியிருக்கும் யோகம் உண்டென்று சொல்லலாம்.           


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

குழந்தை பாக்கியம் தடை ஏன்?

"குழல் இனிது யாழ் இனிது அவர்தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்"

குழந்தையின் மழலை சொல்லின் இனிமையை அனுபவிக்காதவர்கல்தான் குழலினுடைய இசையையும் யாழினுடைய இசையையும் வியந்து பேசுவார்களாம்.

பொதுவாக திருமணமான தம்பதியர் இருவருமே பெரிதும் எதிர்பார்ப்பது தங்கள் குடும்பத்தில் புதிதாக இணையபோகும் குழந்தையின் வரவைத்தான்.

இவர்களை தவிர பெண்ணை பெற்ற தாயாரும் தந்தையாரும், பையனை பெற்ற தந்தையும், தாயாரும் பெரிதும் எதிர்பார்ப்பது அவர்களை தாத்தா  பாட்டி என்று பேரனோ பேத்தியோ கூப்பிடும் நாளை எதிர்பார்த்துதான்.
ஆனால் ஒரு சில கல்யாணம் தம்பதியர் மிகவும் கவலை படும் விஷயம் இந்த குழந்தையின்மைதான்.

ஆம் திருமணமாகி நாட்கள் பல கடந்து குழந்தை இல்லை என்று கவலைபடுபவர்கள் நிறைய பேர்.

ஜோதிட ரீதியாக இதற்க்கு காரணம் என்ன?

ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரகங்களின் அடிப்படையில்தான் மனித வாழ்க்கையின் சுக துக்கங்கள் நிர்ணயிக்கபடுகின்றன. கிரகங்களின் வேகம், தன்மை போன்றவற்றை வைத்து ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையின் தன்மைகள் நன்மையாகவோ தீமையாகவோ நடைபெறுகின்றது. மனித வாழ்க்கையின் அம்சங்கள் என்பது குடும்பம், பணவரவு, பேச்சு, சொல், செயல், அண்ணன் தம்பி உறவு, தாய், தந்தையர் உறவு, வீடு, வாகனங்களின் அமைப்பு, நோய், எதிரிகள், மனைவி, ஆயுள், தொழில், வேலை, படிப்பு, லாபம், நஷ்டம், குழந்தை பிறப்பு போன்றவை.          


சூரியனையும் சந்திரனையும் நாம் கிரகங்கள் அவை மனித இனத்திற்கு பயன் படுகின்றன என்று நாம் ஒத்து கொள்ளும்போது இவைகளை போன்று மீதம் உள்ள கிரகங்களும் மனித வாழ்வின் சுக துக்கங்களை நிர்ணயிக்கின்றன என்று ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு காலத்தில் ஜோதிட சாஸ்திரத்தை மூட நம்பிக்கை என்று கூறிவந்த மேலைநாடுகள் கூட இன்று ஜோதிடம் ஒரு அறிவியல் பூர்வமான ஆய்வு
என்று ஒத்துக்கொள்கின்றன. இதற்க்கு சாட்சி அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் ஜோதிட நம்பிக்கை.

ஜோதிடத்தில் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உண்டா அல்லது தோஷங்கள் இருக்கிறதா என்பதை நிர்ணயிப்பது பஞ்சமஸ்தானம். இந்த பஞ்சமஸ்தானம் கணவன் மனைவி இருவருக்கும் கெடாமல் இருக்க வேண்டும். அதாவது சுப கிரக பார்வை, சேர்க்கை, இருப்பு போன்ற அமைப்பு இருந்தால் பெருமை தேடி தரும் குழந்தை பாக்கியம் உண்டு என்று சொல்லலாம். பாவ கிரக பார்வை, சேர்க்கை, இருப்பு போன்றவை இருந்தால் குழந்தை பாக்கிய தடை உண்டாகலாம்.

குழந்தை பாக்கிய தடையை நீக்குவதற்கு ஜோதிடத்தில் தீர்வு உண்டா?


குழந்தையின்மைக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து உரிய வழிமுறைகளை செய்வதின் மூலம் குழந்தை பாக்கியம் என்னும் தடையை அகற்றலாம்.             
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

குல தெய்வம் யார் என்று தெரியவில்லையா?

குலதெய்வம் யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா? 


இந்த குறை இன்று பெரும்பாலானவர்களிடம் உள்ளது. காரணம் வேலை தொழில் காரணமாக இன்று உலகம் மிகவும் சுருங்கி விட்ட நிலையில் பிறந்த நாட்டை விட்டு பிழைப்பதற்காக வேறு ஒரு நாட்டில் குடியேறி சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை.

குலதெய்வம் என்பது யார்? குலதெய்வத்தின் மகிமை என்ன?
உங்கள் முன்னோர்களால் அதாவது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா போன்றவர்களால் முதன்மை தெய்வமாக வழிபட்ட தெய்வம் தான் குல தெய்வம் என்று கூறுவார். பொதுவாக ஒரு சமுகத்துக்கு என்று ஒரு தெய்வத்தினை பொதுவாக வணங்குவர். ஒரு குடும்பத்தில் நடக்கும் அணைத்து முக்கிய விசேஷங்களிலும் முதன்மையாக வணங்குவது குலதேவம்தான். வீட்டில் ஒரு கல்யாணம் நடக்க போவதாக இருந்தால் முதலில் பத்திரிக்கையை குலதெய்வத்திற்கு வைத்து படைத்து விட்டுதான் மற்றவர்களுக்கு பத்திரிக்கை கொடுப்பார்கள். காரணம் குல தெய்வம் ஆசி இருந்தால் அந்த காரியம் நல்ல படியாக நடக்கும் என்று. அது போன்று குழந்தைகளுக்கு முதல் முடி காணிக்கையாக கொடுப்பதும் குலதெய்வம் கோயிலில்தான்.

குலதெய்வம் கோயிலில் உங்கள் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வந்ததால் நீங்கள் அங்கு சென்று வணங்கும்போது அவர்களுடைய ஆசி
உங்களுக்கு மனபூர்வமாக கிடைக்கும் என்று நம்பலாம்.  
பொறுப்புள்ள பெரியவர்கள் தங்களுடைய வருங்கால சந்ததியர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய குலதெய்வம் யார் என்பதையும், எங்கு, எப்படி  வணங்க வேண்டும் என்பதை சொல்லி கொடுத்து விடுவார்கள். அதன் அடிப்படையில் குலதெய்வத்தினை குறைந்த பட்சம் வருடம் ஒருமுறையாவது அதாவது சிவன் ராத்திரியன்று குல தெய்வம் கோயிலுக்கு சென்று வணங்கி வருவார்கள். அன்றைய தினம் அவர்கள் சமுகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அங்கு குழுமி இருந்து குல தெய்வ பூஜை நடத்துவர்.

சரி. முறையான குலதெய்வம் யார் என்று தெரிந்தவர்களுக்கு குல தெய்வ வழிபாடு என்பது ஒரு பிரச்சனை இல்லை.
குலதெய்வம் யார் என்று தெரியாதவர்கள் யாரை குலதெய்வமாக நினைத்து வழிபடுவது?

குலதெய்வம் யார் என்று தெரியாதவர்களுக்கு அவர்களுடைய அவர்கள் பிறக்கும்போது அமைந்த கிரகங்களின் அடிப்படையில் யாரை குலதெய்வமாக வணங்க வேண்டும் என்று கண்டுபிடிக்கலாம். அதன் அடிப்படையில் குல தெய்வம் யார் என்று தெரியாதவர்கள் அந்த தெய்வத்தினை குலதெய்வமாக வணங்கலாம்.    
        
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள