Showing posts with label உங்கள் வருங்கால கணவர் எப்படிபட்டவர்?. Show all posts
Showing posts with label உங்கள் வருங்கால கணவர் எப்படிபட்டவர்?. Show all posts

உங்கள் வருங்கால கணவர் எப்படிபட்டவர்?

உங்கள் வருங்கால கணவர் எப்படி பட்டவர்? இந்த கேள்விக்குண்டான பதிலை தெரிந்து கொள்வதில் பொதுவாக திருமணமாகாத எல்லா பெண்களுக்கும் எல்லோருக்கும் ஒரு ஆவல் இருக்கும்.

கடந்த காலங்களை போல் கணவன் மனைவி என்றாலே ஒரு அன்யோன்யம், அன்பு ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்லும் தன்மை எல்லாம் இருக்கும்.

ஆனால் இப்போது வாழ்க்கையே ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. தொலைகாட்சி, இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கமும் அதிகமாகிவிட்டது. அதனால் நல்ல குணாதிசயங்கள் படைத்தவர்கள் கூட இந்த ஊடகங்களின் நெகடிவ் விஷயங்களை எடுத்துகொண்டு கெட்ட குணாதிசயங்களை  கொண்டவர்களாக ஆகி விடுகிறார்கள்.

இன்னும் சொல்லபோனால் "கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்" என்று பாட்டு பாடும் நிலையில் இருக்கின்றனர்.

இன்னும் சிலர் "அந்நியன்" பட விக்ரம் போல பகலில் "அம்பியை" போலவும் இரவில் "அந்நியனை" போலவும் இருக்கின்றனர்.

ஒரு படத்தில் நகைசுவை நடிகர் வடிவேலு வேலைக்கு கிளம்பும்  முன்பு நெற்றியில் பட்டை போட்டுகொண்டு பக்தி பிழம்பாக தாய் தந்தையிரடம் ஆசி பெற்று இது போன்று ஒரு பிள்ளையா என்ற விதத்தில் நடித்திருப்பார். ஆனால் அதேவடிவேலு மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் குடிபோதையில் அதே அம்மா அப்பாவை ஓட ஓட விரட்டி அடிப்பார். காரணம் குடி போதை.

இது போன்று இன்று எத்தனையோ குடும்பங்களில் போலி சுய ரூபத்தை  கண்டு ஏமாந்து திருமணதிற்கு பின்பு அவனுடைய உண்மையான சுய ரூபம் மனைவிக்கு தெரிய வந்து அதன் மூலம் நித்தம் நித்தம் கண்ணீர் வடித்து கொண்டு இருக்கும் இளம் பெண்கள் எத்தனையோ பேர். சிலர் கோளைதனமாக உயிரை மாய்த்து கொண்டும் இருக்கிறார்கள்.

சரி, இதுபோன்று ஒருவருடைய உண்மையான குணாதிசயங்களை ஜோதிடம் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா? முடியும்.

பொதுவாக ஒருவருடைய குணாதிசயங்களை  அவர்களுடைய ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களின் பார்வை, இருப்பிடம், சேர்க்கை போன்ற நிலையை வைத்து அவர்களுடைய  உண்மையான குணாதிசயம் என்ன என்பதை கண்டுபிடிக்கலாம்.   

எனவே திருமணம் செய்துகொள்ள போகும் ஒரு பெண் தன் வருங்கால கணவன் "அந்நியன்" பட விக்ரமா, "மன்மதலீலை" பட கமலஹாசனா
இரு உருவம், இரு குணம் கொண்டவனா அல்லது உண்மையிலேயே நல்லவனா நல்ல குணங்கள் கொண்டவனா என்பது பற்றி ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களின் பார்வை, இருப்பிடம், சேர்க்கை போன்ற நிலையை வைத்து அறிந்துகொள்ளலாம். அப்படி செய்யும்போது நல்லதொரு துணையை தேர்ந்தெடுத்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம்.
   
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள