Showing posts with label வேலை கிடைப்பதற்கு தாமதம் ஏன்?. Show all posts
Showing posts with label வேலை கிடைப்பதற்கு தாமதம் ஏன்?. Show all posts

வேலை கிடைப்பதற்கு தாமதம் ஏன்?

வேலை என்பது இன்றைய ஆண்களிடமும் பெண்களிடமும் மிகவும் அத்தியாவசியமான தேவை ஆக உள்ளது.

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கிறதோ இல்லையோ இந்த உலகத்தில் ஜீவனம் நடத்துவதற்கு ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டிதான் உள்ளது.

சமீபத்திய செய்தி தமிழகத்தில் உள்ள அரசு துறை பணிகளுக்கு ஒரு சில ஆயிரம் காலி இடங்களுக்கு வந்துள்ள விண்ணப்பங்கள் 14 லட்சத்தையும் தாண்டி விட்டதாம். அப்படி என்றால் எத்தனை லட்சம் பேர் வேலை  தேடி கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். 

வேலை தேடுபவர்கள் பலருக்கு உரிய கல்வி தகுதி, பொது அறிவு தேர்வில் வெற்றி பெறும் தகுதிகள் இருந்தும் வேலை கிடைக்காமல் போகும் நிலை எத்தைனையோ பேருக்கு உண்டு.

ஆனால் ஒரு சிலர் பார்த்தீர்கள் என்றால் எல்லாவற்றிலுமே average தான். ஒரு நல்ல திறமைசாலியை போன்று நல்ல வேலை கிடைத்து  நல்ல உயரிய பதவியுளும் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.

நல்ல திறமைசாலிக்கு வேலை கிடைப்பதில் சிரமம். திறமை
இல்லாதவர்கள் நல்ல வேளையில்.

இதற்க்கு என்னவென்று சொல்வது. பொதுவாக என்ன சொல்வார்கள். அவன் புண்ணியம் செய்தவன் என்று.

புண்ணியம்  என்பது  என்ன? பிறருக்கு உதவி செய்ய முடிய வில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது. ஒரு சிலர் தன்னுடைய வீட்டு குப்பையை அடுத்த வீட்டுக்காரன் வாசலில் கொட்டுபவர்களும் இருக்கிறார்கள். அதுதான் உபத்திரவம் செய்வது.

பெரியவர்களாக இருந்தால் தெரிந்தோ தெரியாமலும் மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் இருப்பது. தனக்கிருக்கும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மற்றவர்கள் சொத்தை தன்னுடையதாக்கி கொள்வது போல. அந்த பாவம் யார் தலையில் விடியும். அவர்களுடைய பிள்ளைகள் தலையிலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தலையிலும்.

இதுபோன்று இன்னும் எண்ணற்ற பாவகரமான செயல்களை சிலர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இது போன்ற பாவகரமான செயல்களுக்கு என்ன  விளைவு உண்டாகும்?

சந்தேகமே இல்லை அவர்களுடைய சந்ததிகளை பாதிக்கும். சந்ததிகளுடைய  வளமான வாழ்க்கைக்குரிய செயல்களை பாதிக்கும். அந்த செயல்களை நடக்க விடாமல் செய்யும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. ஒருவருக்கு முற்பகலில் அதாவது காலையில் செய்த கெடுதல் அன்றே அவரை திரும்ப தாக்கும் என்பதாகும்.       


ஜோதிட ரீதியாக அதற்குண்டான பதில் என்ன?

ஒருவர் என்னதான் முயற்சி செய்தாலும் அவருக்கு வேலை வாய்ப்பு தட்டி செல்கிறது என்றால் முன்னோர்கள் செய்த சில பாவங்கள் இவர்களுடைய முயற்சியை தடை செய்கிறது என்று அர்த்தம்.

பாவங்கள் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வது. ஒருவர் பிறந்த நேரத்தில் அமைந்த கிரகங்கள்தான் ஜாதகத்தில் கட்டங்களாக வரைய படுகிறது. ஒவ்வொரு கட்டமும் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமாகும்.

அதுபோன்று  ஒருவருக்கு தடைகளை உண்டாக்க கூடிய பாவங்கள் இருந்தால் அது வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் தடையாக இருக்கும்.
அந்த தோஷங்களை உரிய வழிமுறைகள் மூலம் நீக்கினால் வேலை வாய்ப்பு கிடைப்பதர்க்குண்டான வழிமுறைகளை ஏற்படுத்தலாம், தாமதத்தை தவிர்க்கலாம்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள