Showing posts with label நோய்களுக்கு காரணம்?. Show all posts
Showing posts with label நோய்களுக்கு காரணம்?. Show all posts

நோய்களுக்கு காரணம்?

 நோய்கள் உண்டாவதற்கு பல காரணங்கள் உண்டு.. ஒவ்வொருவருடைய பழக்க வழக்கங்கள், வாழும் சூழ்நிலை போன்ற பல காரணங்களை கூறலாம்.
அதுவும் சர்க்கரை வியாதியினால் அவதி படுபவர்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது..

சில நோய்களுக்கு வாழ் நாள் முழுவதும் மருந்து சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான் அந்த நோய் கட்டுக்குள் இருக்கும் இது பொதுவாக கூறுவது.

ஆனால் நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் எந்த வியாதிக்கு என்ன மருந்து சாப்பிட்டு இருப்பார்கள்.. உங்கள் வீட்டில் உள்ள மிகவும் வயதான முதியவர்கள் இருந்தால் கேட்டு பாருங்கள்.. மருந்து என்றால் என்ன விலை என்று .கேட்பார்கள்

சில நாட்கள் முன்பு பத்திரிக்கையில் படித்த செய்தி ஒரு வயதான மூதாட்டி நூறு வயதை கடந்தவர் ஊசி என்பதே என்ன வென்று தெரியாதாம். வியாதி என்று வந்தால் ஒன்று பட்டினி அல்லது பக்க விளைவு இல்லாத  மூலிகை மருந்துகள். அதன் பின்பு கோயில் குளம் என்று கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டு தங்கள் வேலையை பார்ப்பார்கள். இது போன்றவர்கள் இன்னும் நூறு வயதை கடந்து தங்களது வேலையை தாங்களே செய்து கொண்டு நன்றாக .இருக்கிறார்கள்

ஆனால் இன்று தலைவலிக்கு மருந்து சாப்பிட்டால் தலைவலி போய் வயிற்று வலி வந்து விடுகிறது. பக்க விளைவுகளினால் உண்டாகும் வியாதிகள் ஏராளம்..

சரி ஜோதிட ரீதியாக வியாதிகளை பற்றி என்ன கருத்து இருக்கிறது. மனித உடலே கிரகங்களின் கலவையாகும். பிறக்கும்போது கிரகங்களின் கூட்டணி வானில் எப்படி இருந்ததோ அதன் கலவைதான் மனிதனுடைய உடலும்..
கிரகங்களின் வலுவிற்கு தகுந்தாற்போல் அவனுடைய சொல், செயல், சிந்தனை அமையும். அந்த கலவையில் சில வலுவுள்ள கிரகங்களும் இருக்கும். சில வலுவில்லாத கிரகங்களும் இருக்கும்..

வலுவில்லாத கிரகங்களுக்கு தகுந்தாற்போல் அவனுடைய சொல், செயல், சிந்தனை அமையும்போது அவனுடைய உடல் பாதிக்கப்பட்டு வியாதிகள் உண்டாகிறது.

சூரியன் வலு இழந்தால்  உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகளினால் பாதிக்க படுகிறான். சந்திரன் வலு இழந்தால்  மன சம்பந்தப்பட்ட வியாதிகளினால் பாதிக்க படுகிறான்.. இது போன்று ஒவ்வொரு கிரகமும் பாதிக்கும்போது சில குறிப்பிட்ட வியாதிகளினால் பாதிக்க படுகிறான்..

சரி ஜோதிட ரீதியாக இது போன்று வியாதிகளினால் பாதிக்க படும் போது தீர்வு உண்டா? தீர்வு உண்டு.. எந்த கிரகத்தினால் பாதிப்பு ஏற்படுகின்றதோ அந்த கிரகத்தை சாந்தி செய்வதுதான் ஒரே வழி.  அதாவது தெய்வ வழிபாடுதான். சில மருத்துவர்களே எல்லாம் நான் செய்து விட்டேன் இனி
கடவுள்தான் கருணை செய்யவேண்டும் என்று கூற கேட்டிருப்பீர்கள்..

எனவே கிரக கோளாறுகளும் மனிதனின் வியாதிகளுக்கு காரணமாகவும் இருக்கிறது..        


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள