Showing posts with label வாழ்க்கையில் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்கும் யோகம் யாருக்கு?. Show all posts
Showing posts with label வாழ்க்கையில் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்கும் யோகம் யாருக்கு?. Show all posts

வாழ்க்கையில் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்கும் யோகம் யாருக்கு?

வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான். எல்லோருக்கும் எல்லாவித வசதிகளும் இருந்து அவற்றை அனுபவிக்கும் பாக்கியமும் இருந்தால் எல்லோருக்கும் வாழ்க்கை என்பது சுகமான அனுபவம்.

ஒருவர் வாழ்க்கையில் சுகமாக வாழ்வதற்கு முக்கியமாக படிப்பு தேவை. படிப்பு இருந்தால் நல்ல உத்தியோகத்திற்கு போகலாம். படிக்க வில்லை என்றால் நல்ல அறிவு இருக்க வேண்டும். அறிவு இருந்தால் வேலைக்கு செல்ல வில்லை என்றாலும் சொந்தமாக தொழில் செய்து பெரிய தொழில் மேதையாக ஆகலாம். எத்தனையோ பேர் படிக்கவில்லைஎன்றாலும்  பெரிய தொழில் அதிபர்களாகவும் தொழில் மேதையாகவும் இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள்.

படிப்பு மற்றும் அறிவு மட்டும் இருந்தால் ஒருவர் வாழ்க்கையின் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்க முடியுமா?

பணம் வேண்டும். பணம் இருந்தால்தான் வாழ்க்கையின் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்க முடியும். வசதிகள் என்றால் சௌகரியங்கள். வீடு வண்டி, தேவைக்கேற்ப பணம், மூன்று வேலை நிறைவான சாப்பாடு, மனதிற்கு பிடித்த சாப்பாட்டை சாப்பிட உடல்நிலையும், அணிந்து மகிழ நகைகள் உடைகள் போன்றவை. இவை அனைத்தையும் அனுபவிக்க பணம் வேண்டும். பணம் இருந்தால் படிப்பு இல்லையென்றாலும் இவற்றை அனுபவிக்க முடியும். படிப்பு இருந்தால் அந்த படிப்பை வைத்து பணம் சம்பாதித்து அந்த பணத்தை வைத்து வாழ்க்கையின் வசதிகளை அனுபவிக்கலாம். படிப்பு இல்லையென்றால் அனுபவம் அறிவை வைத்து தொழிலோ அல்லது வேலை செய்து அந்த பணத்தை வைத்து வாழ்க்கையின் வசதிகளை அனுபவிக்கலாம்.

ஆனால் எல்லோராலும் அது போன்று வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளை அனுபவிக்க முடிய வில்லையே ஏன்? ஜாதக ரீதியாக என்ன தீர்வு?

ஜாதகத்தில் முதலாம் பாவத்தில் ஒரு அம்சம்  ஒரு மனிதனின் வசதியான வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது. முதலாம் பாவம் எப்படியோ அதை வைத்துதான் தனி மனித வாழ்க்கையும் வசதியும் அமையும்.

வாழ்க்கையில் அடைய போகும் வசதிகள் அனுபவிக்க போகும் வசதிகள் முதலாம் பாவத்தில் வித்யாகாரகனும் தன்காரனும் சேர்ந்து நல்லபடியாக இருந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கையின் எல்லாவித வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்க பிறந்தவர் என்று கூறலாம். தன காரகனும் வித்யாகாரகனும் கெட்டு  போகாமல் இருந்தால் அவர் வாழ்க்கையின் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்க பிறந்த யோகக்காரர் என கூறலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள