Showing posts with label பூர்வீக சொத்துக்கள் எப்போது கிடைக்கும் ?. Show all posts
Showing posts with label பூர்வீக சொத்துக்கள் எப்போது கிடைக்கும் ?. Show all posts

பூர்வீக சொத்துக்கள் எப்போது கிடைக்கும் ?

சிலர் பார்த்தீர்கள் என்றால் முன்னோர் சொத்துக்கள் கோடி கணக்கில் இருக்கும். வீடு வாசல்கள் என்று பார்த்தல் குறைந்த பட்சம் ஒரு பத்து வீடாவது இருக்கும். தாத்தன் பாட்டி வழி சொத்துக்கள் இருக்கும்.

இவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தும் இருக்க இடம் இல்லாமல், காசு பணம் இல்லாமல் பணக்கார ஏழையாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் நாட்டில் எத்தனையோ பேர்.

காரணம். பூர்விக சொத்து இருந்தும் அனுபவிக்க முடியாத நிலைமை?

என்ன காரணம்? பங்காளி சண்டை, கூட பிறந்த அண்ணன் தம்பி தகராறு, இன்னும் சில இடங்களில் பெத்த தாய் தந்தையே பிள்ளைகளுக்கு எதிரியாகி சொத்தை மறுக்கும் நிலை. உனக்கு நான் சொத்து எழுதி வைக்க வேண்டும். முடியாது உன்னால் முடிந்தால் பார்த்து கொள் என்று விவகாரம். சில இடங்களில் உயிர் பலி அளவிற்கு சென்று விடுகிறது.

இன்னும் சிலர் நீதி மன்ற வாசலிலே கதியாக கிடந்தது கண்ணை மூடுவதற்குள் அந்த சொத்தை நம்மால் அனுபவிக்க முடியுமா என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பாக்கியம் இருப்பவர்கள் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அந்த ப்ராப்தம் இருந்து அனுபவித்து விடுகின்றனர். சிலருக்கு உயிருடன் இருக்கும்போது பூர்விக சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை

சரி இதற்க்கு என்ன காரணம்? பூர்வீக சொத்து அனுபவிக்க முடியாமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு. முன்னோர்களின் சாபம் அந்த சொத்தை அனுபவிக்க விட முடியாமல் செய்து விடும். அது கோர்ட் வழக்காக இருக்கலாம். கோர்ட் வழக்கு  என்றாலே அண்ணன், தம்பி, பங்காளிகள், அக்காள், தங்கை, தாய், தந்தை போன்ற நெருங்கிய சொந்தங்கள் தொடுத்து இருக்கும்  வழக்குகளினால் உரியவர்களை பூர்விக சொத்துக்களை அனுபவிக்க விடாமல் செய்து விடும்.

சரி ஜாதக ரீதியாக் இதன் பாதிப்பு என்ன?

ஜாதகத்தில் பூர்வ புண்ணியமும் பாக்கியமும் தீய கிரகங்களின் ஆக்கிரமிப்பு, பார்வை, சேர்க்கை, இருப்பிடம், நிலைமை இவற்றின் அடிப்படையில் பாதிக்க பட்டு இருந்தால் பூர்வீக சொத்து இருந்தும் அனுபவிக்க முடியாத நிலைமை ஏற்படும்.

வம்பு வழக்குகளில் இருந்தால் லாப ஸ்தானமும், மறைவு ஸ்தானங்களின் நிலையை வைத்தும் அந்த வழக்கு வெற்றி பெறுமா அல்லது தோல்வியை தழுவுமா, வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெற்று பூர்வீக சொத்துக்களை அனுபவிக்க முடியுமா என்பதையும்  நிர்ணயம் செய்ய முடியும்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள