Showing posts with label எப்போது திருமணம் நடத்த கூடாது?. Show all posts
Showing posts with label எப்போது திருமணம் நடத்த கூடாது?. Show all posts

எப்போது திருமணம் நடத்த கூடாது?

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அந்த அளவிற்கு திருமணம் வெகு முக்கியம் என்று அந்த காலத்தில் நம் முன்னோர்கள் முக்கியம் கொடுத்து வைத்திருந்தனர்.

அதனால்தான் திருமணம் நடத்தி முடிப்பதற்கு முன்பு ஒரு ஆணின் ஜாதகத்தையும் பெண்ணின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பார்த்து பல விசயங்களில் இருவரது ஜாதகமும் ஒத்து சென்றால்தான் நடத்தி வைப்பார்கள்.

பெண் பார்க்கும் படலம் தொடங்கி, நிச்சயதார்த்தம், திருமணம் திருமணம் முடிந்த பிறகு சாந்தி முகுர்த்தம் வரை எல்லாமே நேரம் காலம் பார்த்துதான் நடத்தி வைத்தனர்.

காரணம் ஒரு மனிதரது வாழ்க்கையில் நடக்கும் திருமணம் நீண்ட நெடும் காலமாக நீடித்து நிற்கும் மண வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்கு மட்டும்தான்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்துவதற்கு தேதி குறிப்பதற்கு
முன்பு ஜாதகத்தில் சில விசயங்களை பார்த்துதான் தேதி குறிக்க வேண்டும்.
அவற்றில் ஒன்று திருமணமாகும் பெண்ணின் அட்டமாதிபதி திசை ஆணுக்கு நடந்தால் அந்த கால கட்டத்தில் திருமணம் செய்யக்கூடாது.
அதேபோன்று திருமண மாகும் ஆணின் அட்டமாதிபதி திசை ஆணுக்கு நடந்தால் அந்த கால கட்டத்திலும் திருமணம் செய்யக்கூடாது.

இது திருமணம் செய்வதற்கு தேதி தேர்ந்தெடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விதிகளில் ஒன்று. இது போன்று இன்னும் சில விதிகள் உள்ளன. அது போன்று விதிகளை வைத்து செய்யும் திருமணங்கள் நீடித்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.   
      
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள