Showing posts with label காதல் கல்யாணம் உங்களுக்கு மகிழ்ச்சியை தருமா?. Show all posts
Showing posts with label காதல் கல்யாணம் உங்களுக்கு மகிழ்ச்சியை தருமா?. Show all posts

காதல் கல்யாணம் உங்களுக்கு மகிழ்ச்சியை தருமா?

இன்றைய கால கட்டத்தில் இந்த கேள்வி மிகவும் அவசியமான கேள்வியாக் தென்படுகிறது. சமீப காலங்களில் நடை பெரும் திருமணங்களில் பெற்றோர்களாக பார்த்து நிச்சயித்து நடத்தும் திருமணங்களை விட காதல் திருமணங்கள் தான் அதிகமாக .நடக்கின்றன.

சில குடும்பத்தில் பெற்றோர்களுடைய ஆதரவுடன் அதாவது முழு மனதோடோ முழு மனதிலாமலோ arrainged marriage போன்று திருமணம் நடை.பெறுகின்றது. இது போன்ற திருமணங்கள்தான் இன்று அதிகம் .நடைபெறுகிறது.

இது போன்று நடை பெரும் திருமணங்களில் ஜாதக பொருத்தம் திருமண பொருத்தம் போன்ற அம்சங்கள் பெரும்பாலும் பார்ப்பதில்லை. ஆனால்
சில காலங்கள் முன்பு வரை அதாவது 10அல்லது 20 வருடங்களுக்கு முன்பு வரை எந்த திருமணமும் ஜாதக பொருத்தம் திருமண பொருத்தம் இன்றி .நடக்காது. ஜாதக பொருத்தம் திருமண பொருத்தம் இல்லையென்றால் அந்த திருமணத்தை இரு வீட்டு பெற்றோர்களும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.

பல ஜாதகங்களை பார்த்து பொருத்தமான ஜாதகத்தை தேர்ந்தெடுத்து
அந்த பையனுக்கும் பெண்ணுக்கும்தான் திருமணத்தை நடத்தி .வைப்பார்கள்

சரி திருமண பொருத்தம் சரி இல்லை என்றால் ஏன் வேண்டாம் என்று சொன்னார்கள் என்றால் அந்த திருமண பொருத்ததில் பலவித அம்சங்களை உடல் ரீதியாக மன ரீதியாக உயிர் ரீதியாக இருவருக்கும் பொருந்தி வருகின்றதா என்று பார்ப்பார்கள் அப்படி பொருந்தி வரும்போது அந்த இருவரும் சண்டை சச்சரவு இல்லாமல் காலம் பூராவும்
கணவன் மனைவியாக வாரிசுகளை பெற்றெடுத்து சந்தோசமாக நீண்ட ஆயுளுடன்  குடும்பம்
நடத்தி .வந்தார்கள். இன்றும் நடத்தி வந்து கொண்டு .இருக்கிறார்கள்
 சில தம்பதிகள் அறுபதாம் கல்யாணம் என்பதாம் கல்யாணம் என்று நடத்தி இப்படிதான் தாம்பத்திய வாழ்க்கை இருக்க வேண்டும் என்று உதாரணமாக 
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

விவாகரத்து என்பதெல்லாம் பத்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் அவ்வளவாக கேள்வி படாத பெயராக .இருந்தது. ஜாதக பொருத்தம் திருமண பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்த தம்பதிகளிடையே விவாகரத்து என்பதெல்லாம் கேள்வி படாத ஒரு விஷயம். இல்லையென்று சொல்ல முடியாது.

ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக விவாகரத்துக்கள் .இருந்திருக்கலாம். அவை பொருத்தம் பார்த்ததில் ஏற்பட்ட தவறுகளாக கூட .இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்ததின் விளைவாக கூட இருக்கலாம்.

ஆனால் இப்போது நடைபெறும் கல்யாணம் எல்லாம் பெரும்பாலும் உணர்சிகள் அவசரத்தின் அடிப்படையில் இருப்பதால் திருமண பொருத்தம் ஜாதக பொருத்தம் என்ற அருமையான நம் முன்னோர்களின் கண்டு பிடிப்பை
காற்றில் பறக்க விட்டத்தின் அதன் விளைவாக திருமணம் ஆன மிக குறுகிய காலங்களிலேயே விவாகரதிர்க்காக கோர்ட் வாசலில் தவம் கிடக்க வேண்டிய நிலையில் இன்றைய தம்பதிகள் உள்ளனர்.

எனவே உங்களுடைய காதல் திருமணம் மகிழ்ச்சியை தரவேண்டும் என்றால்
வெளிப்படையாக தெரியும் அல்லது பிரதி பலிக்கும் எந்த ஒரு விசயத்தையும் வைத்தோ அல்லது முக கவர்ச்சி  அடிப்படையில் திருமணத்தை முடிவு .செய்யாதீர்கள். உள்ளத்தால் உங்களது இருவரது மனதும் ஒத்து செல்கிறதா என்பதை அறிந்து காதல் செய்யுங்கள் திருமணம் செய்யுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்களை பெற்ற பெற்றோர்களுக்கும் நீங்கள் தரும் நல்ல பரிசு.



ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள