ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2-12-2012

கிரக கூட்டத்தில் உள்ள சர்ப்ப கிரகங்கள் என கூறப்படும் ராகு கேதுக்கள் வருகின்ற 2-12-2012 அன்று துலாம் ராசிக்கும் மேச ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றன. இது வரையில் கன்னி ராசியில் இருந்த ராகு பகவான் துலாம் ராசிக்கும், மீன ராசியில் இருந்த கேது பகவான் மேஷ ராசிக்கும் இட பெயர்ச்சி ஆகின்றனர்.

கிரக பெயர்ச்சியில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது சனி பெயர்ச்சி ஆகும். அதற்க்கு அடுத்தாற்போல் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகங்கள் ராகு மற்றும் கேது ஆகும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பொதுவாக கோச்சாரப்படி என்றாலும் ஒருவருடைய ஜாதகத்தில் சாதகமான நிலையில் கிரகங்கள் அமைய பெற்றிருந்தால் கோச்சாரப்படி இடம் பெயரும் கிரகங்களினால் பாதிப்பு அவ்வளவாக இருக்காது.

முறையான தெய்வ வழிபாடுகளை உரிய நாட்களில் உரிய தெய்வத்திற்கு மேற்கொள்ளும் போது மழையிருந்தும் வெயிலில் இருந்தும் குடையை போன்று தெய்வ அனுகிரகங்கள் மனிதர்களை கிரகங்கள் இடம் பெயரும்போது ஏற்படும் துன்பங்களில் இருந்து காப்பாற்ற படுவார்கள்.
மலை பெய்யவேண்டும் வெயில் அடிக்க வேண்டும் என்பது இறைவன் நியமித்த விதி. அப்படி வெயில் அடிக்கும்போதும் மழை பெய்யும்போதும்
அவர்களை இறைவழிபாடு என்னும் ஒரு கருவியை பயன்படுத்தி
பாதுகாக்க செய்வதும் அதே இறைவன்தான்.

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப
உயிர்களை படைத்த கடவுள் அவர்கள் கஷ்டப்படும் போது,
அந்த கடவுளை அணுகும்போது நிச்சயமாக காப்பாற்ற படுவார்கள்
என்பது கடவுள் விதித்த நியதி. எனவே உரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும்போது கிரக பெயர்ச்சியால் ஏற்படும் துன்பங்களில்
இருந்து தப்பித்து கொள்ளலாம்.

இந்த ராகு கேது பெயர்ச்சியை பொறுத்தவரை நல்ல பணவரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், முன்னோர்களின் ஆசியும், நோய், நொடி, கடன்களில் இருந்து விடுதலையும், குழந்தைகள் மற்றும் பூர்வ புண்ணிய பலன்களும் ரிஷபம், சிம்மம்,விருசிகம், தனுசு ராசி காரர்களுக்கு  கிடைக்கும்.

கன்னி, மேஷம், துலாம் ராசி காரர்களுக்கு குடும்ப விஷயங்கள், பண விஷயங்கள், வாக்கு வாதங்கள், கணவன் மனைவி உறவு, போன்றவற்றில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. முறையான தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும்போது துன்பங்களை தாங்கி கொள்ளும் சக்தி கிடைக்கும்.

மற்ற ராசிக்காரர்கள் ஆன மிதுனம், கடகம், மகரம், கும்பம், மீன
ராசிக்காரர்கள் உரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும்போது பிள்ளைகள் வழியில் உண்டாகும் தொல்லைகள், தாய், வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தொழில், வேலையில் உள்ள பிரச்சனைகள், சொத்து பிரச்சனைகள், ஆயுள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.         

உங்களுடைய குல தெய்வ வழிபாடுகளையும் மேற்கொண்டு, முன்னோர்களுக்கு அமாவாசை காலங்களில் தர்ப்பணங்களை தவறாது கொடுத்து வந்து விநாயகர் மற்றும் துர்க்கை வழிபாடுகளை மேற்கொண்டீர்கள் என்றால் ராகு கேது பெயர்ச்சியினால் உண்டாகும் துன்பங்களில் இருந்து
தாங்கி கொள்ளும் சக்தியை பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.
 

இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)

       

       


              

    

சந்தோசமாக வாழும் அமைப்பு யாருக்கு?


பொதுவாக மனிதர்களை பொறுத்தவரை சந்தோசமாகத்தான் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். கஷ்டம் என்று வந்துவிட்டால் துவண்டு விடுவார்கள். என்னடா இது வாழ்க்கை? என்று அலுத்து கொண்டு கவலை பட ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் சிலருக்கு மட்டும் பார்த்தால் சந்தோசமாக வாழும் அமைப்பு அவர்களுக்கு மட்டும்தான் என்று அணைத்து விசயங்களிலும் சந்தோசமாக வே இருப்பார்கள். நல்ல குணம், நல்ல பழக்க வழக்கம், நல்ல பணவசதி, நல்ல வேலை வாய்ப்பு, நல்ல தொழில் வாய்ப்பு, நல்ல மனைவி, நல்ல கணவன், நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், பெரியவர்களின் அல்லது முன்னோர்களின் ஆசிர்வாதம், தொழிலில் நல்ல லாபம், நல்ல தூக்கம் போன்ற எல்லா விசயங்களிலும் சந்தோசமாகவே இருப்பார்.

ஒரு சிலருக்கு மட்டும் ஏன் அதுபோன்று சந்தோசம்? பலருக்கு ஏன் சந்தோசம் இல்லாமை?

இதற்க்கு ஜோதிட ரீதியாக என்ன பதில்.  இவை எல்லாமே கிரகங்களின் விளையாட்டு தான் காரணம். ஒருவர் பிறக்கும்போது அவர் பிறந்த நேரத்தில் கிரகங்கள்  வான ரீதியில் எப்படி விளையாடி கொண்டு இருந்தனவோ அதற்க்கு அதற்க்கு தகுந்தாற்போல் மனித வாழ்க்கையில் விளையாட்டு நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் நடக்கின்றன.

பொதுவாக ஒரு மனிதர் சந்தோசமாக வாழ்வது என்பது அவர் பிறக்கும்போது உயிர்ஸ்தானத்தில்  அமர்ந்த கிரகங்களை பொறுத்துதான். அதுமட்டுமன்றி அந்த உயிர்ஸ்தானத்தில் ஏற்படும் கிரக கூட்டு, உயிர்ஸ்தானத்தின் அதிபதியின் நிலைமை அவர் இருக்கும் இடத்தின் நிலைமை அவர் பார்வை பெரும் நிலைமை இவற்றை வைத்து ஒருவருடைய வாழ்க்கையின் அணைத்து சுகங்களும் அமைகின்றன.

சரி உயிர்ஸ்தானம்  நல்லபடியாக அமைந்து கவலை இல்லாமல் வாழ்பவர்களை பற்றி நாம் கவலை பட வேண்டாம்.
அம்பானியை பற்றி நாம் கவலை பட வேண்டாம். வாழ்க்கையில் அவதி பட்டு கொண்டு இருக்கும் அழகப்பனை பற்றி நாம் கவலை படுவோம்.

அவதி பட்டு கொண்டு இருக்கும் அழகப்பனை அவனை படைத்த கடவுள் ஒருவரால்தான் காப்பாற்ற முடியும். ஆம் உயிர் ஸ்தானம் என்று கூறப்படும் ஸ்தானம் ஜோதிடரீதியாக பாதிக்கப்பட்டு ஒருவர் வாழ்க்கையில் அவஸ்தைப்படும் போது அவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து உரிய வழிபாடுகளை மேற்கொண்டால் அம்பானி போன்று ஒரு வாழ்க்கை வாழ முடியாவிட்டாலும் சராசரியான சந்தோசமான மனிதனாக வாழலாம்.
               
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

கஷ்டங்களில் இருந்து விடுபட்டு சந்தோசமாக வாழ்வது எப்படி?

  ஒவ்வொரு மனிதரும் 27 நட்சத்திரங்களின் கட்டுப்பாட்டில் பிறந்து இருப்பார். அந்த வகையில் 27 நட்சத்திரங்களும் 9 கிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த 9 கிரகங்களும் 27 நட்சதிரங்களும்தான் ஒரு மனிதன் சந்தோசமாக இருப்பதற்கும் கஷ்டப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றன.

ஒரு மனிதனுடைய குணாதிசயம், அவனுடைய குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் , அவனுடைய பண வசதி எப்படி இருக்கும், அவனுடைய சொல் வன்மை எப்படி இருக்கும், எதிரிகளை அவனால் சமாளிக்க முடியுமா, கடன் மற்றும் நோய்களிலிருந்து விடுபட முடியுமா, வீடு வசதி வாகன வசதி அமையுமா, குழந்தை செல்வம் உண்டாகுமா, காலத்தில் திருமணம் நடக்குமா அல்லது கால தாமதமாக திருமணம் நடக்குமா அல்லது திருமணமே நடக்காமல் போய் விடுமா, ஆயுள் எப்படி இருக்கும், பூர்வீக சொத்துக்கள் கிடைக்குமா அல்லது அப்படி கிடைத்தால் அது விரயம் ஆகி விடுமா, என்ன மாதிரியான தொழில் அமையும் அல்லது வேலை அமையும், எந்த மாதிரியான தொழில் அல்லது வேலை செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் அல்லது காசு தாரளமாக புழங்கும், தொழில் அல்லது வேளையில்  லாபம் உண்டாகுமா, உள்ளூரில் வேலை கிடைக்குமா அல்லது வெளியூரில் வேலை கிடைக்குமா, உள்ளூரில் தொழில் செய்தால் நல்லதா அல்லது வெளியூரில் தொழில் செய்தால் நல்லதா, வெளி நாடு செல்லும் யோகம் உண்டா, நிம்மதியான தூக்கம் கிடைக்குமா, கணவன் மனைவி உறவு சுகமாக இருக்குமா அல்லது போர்களமாக இருக்குமா, கணவரிடத்தில் மனைவி விசுவாசமாக இருப்பாரா அல்லது கணவர் மனைவியிடத்தில் விசுவாசமாக இருப்பாரா போன்ற பல விசயங்களை கிரகங்களும் நட்சத்திரங்களும் தான் தீர்மானிக்கின்றன.

பிறக்கும்போது ஒவ்வொரு மனிதனும் ஒன்பது கிரகங்களின் கட்டுபாட்டுக்குள்  வந்து விடுகிறான். இந்த ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் கட்டுபாட்டுக்குள் வந்து விடுகின்றன. நட்சத்திரங்கள் என்பவை கிரகங்களின் remote control. 

மேலே சொல்லப்பட்ட மனிதவாழ்க்கையின்   அம்சங்கள் அதாவது பணம், தொழில், குடும்பம், மனைவி, மக்கள், ஆயுள், நோய், கடன், எதிரி, தைரியம்
வீடு, வாகனம், தாய் அன்பு, தந்தையின் அன்பு, பூர்விக  சொத்து, குழந்தை பாக்கியம் போன்ற முக்கியமான வாழ்க்கையின் அம்சங்கள் அனைத்தும் இந்த நட்சத்திரங்களின் கட்டுபாட்டுக்குள்ளும் , கிரங்களின் கட்டுபட்டுக்குள்ளும் வந்து விடுகின்றன.

ஒரு மனிதன் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இருப்பதற்கு இந்த கிரகங்களும் நட்சத்திரங்களும்தான் காரணம்.    

இந்த உண்மையை நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே கண்டு கொண்டு வரும் முன் காப்போம் என்ற பல மொழிக்கு ஏற்ப கிரகங்களினால் ஏற்பட்ட கஷ்டங்களை ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வ வழிபாடுகள் மூலம் தவிர்த்து சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

பிதாகாரனுக்கு  உரிய நட்சத்திரங்கள் கிருத்திகை, உத்திரம், உத்திராடம். மாத்ரு காரகனுக்கு உரிய நட்சத்திரங்கள் ரோகினி, ஹஸ்தம், திருவோணம். சகோதரகாரனுக்கு  உரிய நட்சத்திரங்கள் மிருகசிரிடம், சித்திரை, அவிட்டம்.
வித்யாகாரகனுக்கு  உரிய நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி. புத்திர காரகனுக்கு உரிய நட்சத்திரங்கள் விசாகம், சுவாதி, பூரட்டாதி. களத்திரகாரகனுக்கு உரிய நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம். கர்ம காரகனுக்கு உரிய நட்சத்திரங்கள் அனுஷம், பூசம், உத்திரட்டாதி. ஞான காரகனுக்கு உரிய நட்சத்திரங்கள் மகம், மூலம், அஸ்வினி. ராகு என்று சொல்லப்படும் சர்ப்ப கிரகத்திற்கு உரிய நட்சதிரங்கள் சுவாதி, சதயம், திருவாதிரை.

இந்த நட்சத்திரங்களுக்கு உரிய கிரகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் எப்படி அமைந்திருக்கின்றதோ அதற்க்கு தகுந்தாற்போல் ஒருவருடைய வாழ்க்கையில் பல அம்சங்கள் அதாவது பணம், தொழில், குடும்பம், மனைவி, மக்கள், ஆயுள், நோய், கடன், எதிரி, தைரியம், வீடு, வாகனம், தாய் அன்பு, தந்தையின் அன்பு, பூர்விக  சொத்து, குழந்தை பாக்கியம் அமைகின்றன.  

ஒவ்வொரு மனிதர்களும் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் விரக்தியால் சோர்ந்து போவதும் மேலே கூறப்பட்ட அம்சங்கள்தான்.  மேலே கூறப்பட்ட அம்சங்கள் நல்லபடியாக அமைவதற்கும் அமையாமல் போவதற்கும்  இந்த கிரகங்களின் விளையாட்டும் நட்சத்திரங்களின் விளையாட்டுக்களே காரணம்.

நட்சத்திரங்கள் கிரகங்களை ஆட்டுவிக்கின்றன. கிரகங்கள் மனிதர்களை நல்லவிதமாகவும் தீய விதமாகவும் அவர் அவர் பிறந்த நேரத்தில் அவைகள் நிலை கொண்ட விதத்தில் ஆட்டுவிக்கின்றன.

மனிதன் அல்லல் படும்போது அல்லது வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களான பணம், தொழில், குடும்பம், மனைவி, மக்கள், ஆயுள், நோய், கடன், எதிரி, தைரியம், வீடு, வாகனம், தாய் அன்பு, தந்தையின் அன்பு, பூர்விக  சொத்து, குழந்தை பாக்கியம் போன்றவை பாதிக்கப்படும்போது ஜாதகத்தின் துணையோடு உரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும்போது விடிவு காணலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள