ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2-12-2012

கிரக கூட்டத்தில் உள்ள சர்ப்ப கிரகங்கள் என கூறப்படும் ராகு கேதுக்கள் வருகின்ற 2-12-2012 அன்று துலாம் ராசிக்கும் மேச ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றன. இது வரையில் கன்னி ராசியில் இருந்த ராகு பகவான் துலாம் ராசிக்கும், மீன ராசியில் இருந்த கேது பகவான் மேஷ ராசிக்கும் இட பெயர்ச்சி ஆகின்றனர்.

கிரக பெயர்ச்சியில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது சனி பெயர்ச்சி ஆகும். அதற்க்கு அடுத்தாற்போல் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகங்கள் ராகு மற்றும் கேது ஆகும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பொதுவாக கோச்சாரப்படி என்றாலும் ஒருவருடைய ஜாதகத்தில் சாதகமான நிலையில் கிரகங்கள் அமைய பெற்றிருந்தால் கோச்சாரப்படி இடம் பெயரும் கிரகங்களினால் பாதிப்பு அவ்வளவாக இருக்காது.

முறையான தெய்வ வழிபாடுகளை உரிய நாட்களில் உரிய தெய்வத்திற்கு மேற்கொள்ளும் போது மழையிருந்தும் வெயிலில் இருந்தும் குடையை போன்று தெய்வ அனுகிரகங்கள் மனிதர்களை கிரகங்கள் இடம் பெயரும்போது ஏற்படும் துன்பங்களில் இருந்து காப்பாற்ற படுவார்கள்.
மலை பெய்யவேண்டும் வெயில் அடிக்க வேண்டும் என்பது இறைவன் நியமித்த விதி. அப்படி வெயில் அடிக்கும்போதும் மழை பெய்யும்போதும்
அவர்களை இறைவழிபாடு என்னும் ஒரு கருவியை பயன்படுத்தி
பாதுகாக்க செய்வதும் அதே இறைவன்தான்.

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப
உயிர்களை படைத்த கடவுள் அவர்கள் கஷ்டப்படும் போது,
அந்த கடவுளை அணுகும்போது நிச்சயமாக காப்பாற்ற படுவார்கள்
என்பது கடவுள் விதித்த நியதி. எனவே உரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும்போது கிரக பெயர்ச்சியால் ஏற்படும் துன்பங்களில்
இருந்து தப்பித்து கொள்ளலாம்.

இந்த ராகு கேது பெயர்ச்சியை பொறுத்தவரை நல்ல பணவரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், முன்னோர்களின் ஆசியும், நோய், நொடி, கடன்களில் இருந்து விடுதலையும், குழந்தைகள் மற்றும் பூர்வ புண்ணிய பலன்களும் ரிஷபம், சிம்மம்,விருசிகம், தனுசு ராசி காரர்களுக்கு  கிடைக்கும்.

கன்னி, மேஷம், துலாம் ராசி காரர்களுக்கு குடும்ப விஷயங்கள், பண விஷயங்கள், வாக்கு வாதங்கள், கணவன் மனைவி உறவு, போன்றவற்றில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. முறையான தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும்போது துன்பங்களை தாங்கி கொள்ளும் சக்தி கிடைக்கும்.

மற்ற ராசிக்காரர்கள் ஆன மிதுனம், கடகம், மகரம், கும்பம், மீன
ராசிக்காரர்கள் உரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும்போது பிள்ளைகள் வழியில் உண்டாகும் தொல்லைகள், தாய், வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தொழில், வேலையில் உள்ள பிரச்சனைகள், சொத்து பிரச்சனைகள், ஆயுள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.         

உங்களுடைய குல தெய்வ வழிபாடுகளையும் மேற்கொண்டு, முன்னோர்களுக்கு அமாவாசை காலங்களில் தர்ப்பணங்களை தவறாது கொடுத்து வந்து விநாயகர் மற்றும் துர்க்கை வழிபாடுகளை மேற்கொண்டீர்கள் என்றால் ராகு கேது பெயர்ச்சியினால் உண்டாகும் துன்பங்களில் இருந்து
தாங்கி கொள்ளும் சக்தியை பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.
 

இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)