மனைவியின் மூலம் வசதிகள் யாருக்கு கிடைக்கும்?

சிலர் பார்த்தீர்கள் என்றால் திருமணத்திற்கு முன்பு ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். ஏழ்மையான நிலையில் இருந்தாலும் நன்றாக படித்து, நல்ல உத்தியோகத்தில் இருப்பார்கள். இவர்களுடைய குடும்ப நிலையை கூட பார்க்காமல் இவருக்கு பெண் கொடுக்க நான் நீ என்று போட்டி போட்டுகொண்டு நிற்பார்கள்.

சில பெண்ணை பெற்றவர்கள் பெரிய பணக்காரர்களாக இருப்பார்கள். பல வீடுகள், கார்கள், தோட்டம், நிலம், நகைகள் என்று எதிலும் குறைவில்லாது சகல வசதியுடன் இருப்பார்கள். அவர்களுக்கு பெண் இருந்தால் அந்த பெண்ணை கண் கலங்காமல் காலம் பூராவும் பார்த்து கொள்ளவேண்டும் என்று நல்ல மாப்பிளையை தேடி கொண்டு இருப்பார்கள்.

சிலர் தங்கள் அந்தஸ்துக்கு நிகராக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். காரணம் அந்த மாப்பிளைக்கு அவருடைய அந்தஸ்துக்கு தகுந்தவாறு கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் பஞ்சம் இருக்காது.

எனவே அந்தஸ்தை பற்றி கவலை படாமல், ஏழையாக இருந்தாலும், நல்ல பழக்க வழக்கங்கள், உத்தியோகம் இருந்தால் அவர்களுக்கு தங்கள் பெண்ணை கல்யாணம் செய்து வைத்து விடுவர். அதன் பின்பு அவர் நிலைமை, மனைவியின் மூலமாக வீடு, வாகனம், போன்ற சகல சம்பந்துக்களுடன் சந்தோசமான வாழ்க்கை கடைசி வரையில் இருக்கும்.
இன்னும் சிலர் பார்த்தீர்கள் என்றால் படித்து நல்ல உத்தியோகத்தில் இல்லையென்றாலும் கூட நல்ல பழக்க வழக்கங்கள், எண்ணங்கள் போன்றவையினால் கவரப்பட்டு அவருக்கு வசதியான இடத்தில் பெண் அமைந்து விடும்.

இது போன்ற அமைப்பு அதாவது பிறக்கும்போது ஏழையாக பிறந்து கட்டிய மனைவியின் மூலம் வாழ்க்கையின் அணைத்து வசதி வாய்ப்புகளையும் பெரும் அமைப்பு யாருக்கு கிடைக்கும்? ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன பதில்?

மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அணைத்து அம்சங்களையும் தீர்மானிக்கும் கிரகங்கள் ஒருவருடைய திருமணம் எப்படி இருக்கும் என்று அந்த கிரகங்கள் தான் தீர்மானிக்கின்றன.

அப்படி இருக்கும்போது ஒருவருடைய திருமணதிற்கு உரிய பாவமான களத்திர ஸ்தானாதிபதி, களத்திர காரகன் நல்ல வலு பெற்று, தீயோர் சேர்க்கை இன்றி பார்வை இன்றி லாபத்தில் இடம் பெற்று இருந்தால் அந்த ஆணுக்கு தான் திருமணம் செய்ய போகும் மனைவியின் மூலம் சொத்துக்கள், வசதி, வாய்ப்புகள் பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை.
                     
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள