ஸ்டாக் Exchange எனும் பங்கு சந்தையில் யார் லாபம் சம்பாதிக்க முடியும்?

பங்கு சந்தை என்பது ஒரு நாட்டின் பொருளாதரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று சொன்னால் அதில் மிகை இல்லை. ஒரு நாட்டின் ஆரோக்கியத்தை அதாவது நல்ல வளமாக இருக்கிறது என்பதை ஒரு நாட்டில் நடை பெரும் பங்கு சந்தை வியாபாரத்தை கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உள்ளூர் மக்களின் பங்களிப்பு, வெளிநாட்டு முதலீட்டார்களின் பங்களிப்பு போன்றவற்றை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதரத்தை பங்கு சந்தையின் மூலம் தீர்மானித்து கொள்ளலாம்.

இந்த பங்குசந்தையில் ஈடுபடும் அல்லது முதலீடு செய்வதற்கு தனி நபர்களுக்கும் உரிமை உண்டு. தனி நபர்கள் பங்கு முதலீடு செய்வதற்கு காரணம் குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கி அந்த பங்குகளின் விலை ஏறும்போது அதில் கிடைக்கும் லாப தொகையினை சம்பாதிப்பதற்காக.

ஆனால் முதலீடு செய்யும் எல்லோராலும் லாபம் சம்பாதிக்க முடியுமா?.
ஒரு பங்கு சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு அதில் லாபம் சம்பாதிப்பதற்கு பல வித யுக்திகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது எந்த பங்கை எப்போது வாங்க வேண்டும், எப்போது வாங்க கூடாது, எப்போது விற்ககூடாது, எப்போது விற்க வேண்டும், எந்த பங்கை வாங்க கூடாது போன்ற பல யுக்திகள் வேண்டும்.

பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பதற்கு சமயோஜித புத்தி அதாவது presence of mind என்பது மிக மிக அவசியம். பங்குச்சந்தையில் லாபம் என்பது யூகம் அடிப்படையில்தான். எனவே மனம் என்பது சரியான நிலையில் சிந்திக்கும் நிலையில் இருந்தால்தான் ஒருவரால் லாபம் சம்பாதிக்க முடியும். வேகமும் இருக்க வேண்டும் அதே சமயத்தில் விவேகமும் இருந்தால்தான் லாபம் சம்பாதிக்க முடியும்.


எனக்கு தெரிந்த சிலர் பல வருடங்களுக்கு முன்பு சேமிப்பு அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேர்த்து வாய்த்த ஒரு குறிப்பிட்ட வங்கியினுடைய பங்கை விற்று பல லட்சங்கள் லாபம் பெற்று அந்த லாபத்தினை கொண்டு ஒரு புதிய வீடும் கட்டி விட்டார்.

மற்றும் ஒருவர் பிரபல கம்பனிகளின் பங்குகளை வருட கணக்காக சேர்த்து வைத்து, பல வருடங்கள் கழித்து அந்த பங்குகளை லாபத்துடன் விற்று தன்னுடைய பெண்ணுக்கு திருமணமே நடத்தி வைத்துவிட்டார்.
எப்படி பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பதற்கு வேகத்துடன் விவேகம் தேவைபடுவது போல, பொறுமையும், வதந்திகளை கண்டு பயப்படாமலும் இருக்கவேண்டும்.

பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பது என்பது மனம் சார்ந்த அறிவு பூர்வமான ஒரு யுக்தியாகும்.

சரி ஜோதிட ரீதியாக ஒருவர் பங்கு சந்தையில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்க முடியும் என்ற அமைப்பை அறிய முடியுமா? முடியும்.

ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரகங்கள் மனித வாழ்க்கையின்
ஒவ்வொரு அம்சங்களை தங்கள் கைவசம் எடுத்துக்கொண்டு ஒரு மனிதருக்கு நன்மையோ தீமையோ செய்கின்றன. இதை ஒருவருடைய ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டு நன்மை செய்யுமா தீமை செய்யுமா என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய தனஸ்தானம், மன ஸ்தானம், ரோக ஸ்தானம், அட்டம ஸ்தானம், லாப ஸ்தானம், விரைய ஸ்தானம் இவைகளில் அமைந்துள்ள கிரகங்கள், சேர்ந்த கிரகங்கள், பார்த்த கிரகங்கள் போன்று இன்னும் சில அடிப்படைகளில் ஒருவரால் பங்கு சந்தையில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்க முடியுமா என்று தெரிந்து கொள்ளலாம்.

மேலே கூறிய அமைப்புகள் ஒருவருடைய பிறந்த நேரத்தின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறலாம்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள