யாருக்கு கடன் கொடுத்தால் திரும்பி வராது?

கடன் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகவும் அத்தியாவசியமாகிவிட்ட ஒரு செயல். எப்பேர்பட்ட கோடீஸ்வரனாகி இருந்தாலும் அல்லது பெரிய பெரிய தொழில் நிறுவனங்களை நடத்தும் multi millionaire ஆக இருந்தாலும் கடன் வாங்காமல் இருக்க முடியாது.

தனி நபர்கள் தங்களுக்கு அறிமுகம் ஆனவர்கள் அல்லது இன்னொருவர் சொல்லி கடன் கொடுத்தவர்கள், கடனை கொடுத்துவிட்டு திரும்ப பெற முடியாமல் தவிப்பார்கள் நிறைய பேர். சிலருக்கு சூழ்நிலை காரணமாக வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத இருக்கலாம். ஆனால் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று பல வித பொய்களை சொல்லி கடனை வாங்கி கொண்டு வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் நிறைய பேர்.

நியாயமான வட்டிக்கு கடன் வாங்கி கொண்டு திருப்பி தர வசதி வாய்ப்புகள் இருந்தும் ஏன் திருப்பி தரவேண்டும் என்று அமைதியாக இருப்பவர்கள் ஒரு சிலர். ஒரு சிலர் அதிக வட்டி வாங்குவார்கள். metre வட்டி என்று சொல்வார்கள். மணிக்கு மணி நிமிடம் வட்டி ஏறி வட்டி ஏறி கொண்டே இருக்கும். கொடுத்த வட்டியை கணக்கு பார்த்தல் அசலை விட நாலு மடங்கு ஐய்ந்து மடங்கு அதிகமாக இருக்கும். அது போன்றவர்களிடம் அவசரத்திற்கு கடனை வாங்கி கொண்டு அவஸ்தை படுபவர்கள் எத்தனையோ பேர்.

எனவே கொடுத்த கடனை திரும்ப செலுத்துவதற்கு நாணயம் என்பது மிக மிக அவசியம். நல்ல பண்பு அவசியம். ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடாது. சொன்ன சொல்லை காப்பாற்ற கூடிய தகுதி வேண்டும்.

வாங்கிய கடனை திருப்பி செலுத்தகூடிய தகுதிகளை ஒருவரை பார்த்த உடனையே தெரிந்து கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது. இரு வேறு குணங்களை அல்லது பல் வேறு குணங்களை கொண்ட மனிதர்களிடையே யார் நாணயமானவர் யார் நல்ல பண்புகளை உடையவர் என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும். வெளி தோற்றத்தில் நல்லவர் போல இருக்கலாம், நாணயமானவர் போல பேசலாம் ஆனால் செயல் என்று வந்து விட்டால் நாணயத்தை காற்றில் பறக்க விட்டு விட்டால் என்ன செய்ய முடியும்?

சரி ஜோதிட ரீதியாக ஒருவர் நல்லவர், நாணயமானவர், சொன்ன சொல்லை காப்பாற்றுவார் என்று தெரிந்து  போன்ற முடியுமா? முடியும்.

நான் ஏற்கனவே பல கட்டுரைகள் இந்த வலை பதிவிலேயே எழுதி உள்ளேன்.
ஜாதக கட்டம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்லது கண்ணாடி. என்ன நடக்கும், எப்படி நடக்கும், என்ன நடக்காது, ஏன் நடக்காது போன்ற பல விசயங்களை கண்ணாடி போல காட்ட கூடியது.

அதுபோன்றுதான் ஒரு மனிதனுடைய உண்மையான குணாதிசயம் என்ன, நல்லவனா கெட்டவனா, நாணயம் உள்ளவனா, வாங்கிய கடனை திருப்பி தருவானா அல்லது வம்பு வழக்கு பண்ணிதான் வாங்க முடியுமா, வார்த்தையில் உண்மை இருக்கிறதா அல்லது பொய்தான் இருக்கிறதா  போன்றவற்றை அவனுடைய ஜாதகத்தில் குடி கொண்டுள்ள கிரகங்களின் அடிப்படையிலும், எங்கு குடி கொண்டு இருக்கின்றன என்ற இடத்தின்  அடிப்படையிலும், யாருடன் குடி கொண்டு இருக்கிறார்கள் என்ற அடிப்படையிலும், யாருடைய பார்வையில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையிலும் தெரிந்து அதன் அடிப்படையில் கடன் கொடுத்தால் கடனை திருப்பி வாங்க முடியவில்லை என்ற நிலையை தவிர்க்கலாம்.

மேற்சொன்ன கிரக சூழ்நிலைகள் ஒருவருடைய ஜாதகத்தில் பாதகமாக இருந்து, சேர்ந்து, பார்வையில் அடிபட்டு இருந்தால் அது போன்ற நபர்களுக்கு கடன் கொடுத்தால் அந்த நபர்கள் தங்கள் வாக்குரிதியையும்  காப்பாற்றமாட்டர்கள், நாணயம் என்றால் என்ன விலை என்று கேட்பார்கள், கடன் வாங்குவதற்கு பல வித பொய்களை கூசாமல் சொல்லி பலரிடமும் கடனை வாங்கி ஏமாற்றும் எண்ணத்துடன் இருப்பார்கள். அது போன்ற நபர்களுக்கு கடன் கொடுத்தால் திரும்பி வராது என்பதில் சந்தேகம் இல்லை.
                                                           
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள